/* */

விலங்கு - மனித மோதலுக்கு தீர்வு காண திருச்சியில் 24-ல் கருத்தரங்கம்

திருச்சியில் வன விலங்குகள் - மனித மோதலுக்கு தீர்வு காண்பதற்கான கருத்தரங்கம் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

விலங்கு - மனித மோதலுக்கு தீர்வு காண திருச்சியில்  24-ல் கருத்தரங்கம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் (பைல் படம்)

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது திருச்சி வன மண்டலம். இதில் வன விலங்குகளால் ஏற்படும் மனிதன், வன உயிரின இடையூறுகள், மோதல்களை தீர்க்க கலந்துரையாடல் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. வரும் 24-ஆம்தேதி காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கும். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகிக்க உள்ளார்.

கலெக்டர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கத் தலைவர்கள், மாவட்ட வனக்குழு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் மக்களின் குறைகளை மனுக்களாகவும், நேரடியாகவும் தெரிவிக்கலாம். வனத்துறை அமைச்சர், வனத்துறை உயர் அலுவலர்கள், சில முக்கிய துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி குறைகளை நிவர்த்தி செய்யப்படும். இத்தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Dec 2021 7:43 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்