திருச்சி நகரில் 7 மாதங்களில் 101 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
Crime Crime- திருச்சி நகரில் 7 மாதங்களில் 101 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
Crime Crime- திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்று 7 மாதங்கள் கடந்துள்ளது.இந்த 7 மாதங்களில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். 101 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு ஆணை பிறப்பித்து உள்ளார்.
இதன்படி திருச்சி நகரில் கடந்த 20ஆண்டுகளில் இல்லாத வகையில் 7 மாதங்களில் மட்டும் 101 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த ரவுடிகள் 80 பேர், போதை மருந்து கடத்திய குற்றவாளிகள் 11 பேர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் தலா 4 பேர்,பெண்களை ஆபாசமாக திட்டி மிரட்டியவர்கள், கள்ள சந்தையில் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் தலா ஒருவர் ஆவார்கள்.
இவர்கள் 101 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்டதற்கான ஆணை அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறையில் சார்வு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2