/* */

திருச்சியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார்.

HIGHLIGHTS

திருச்சியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு
X

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் வசித்து வரும் முகுந்தன்-லட்சுமி ஆகியோரின் மகள் ஜீவிதா (வயது 20). திருச்சி ஈவேரா அரசு கல்லுாரியில் பிஎஸ்சி 3-ஆம் ஆண்டு படித்து வந்த இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக காய்ச்சல் வந்துள்ளது. இதற்காக மெடிக்கல்லில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் காய்ச்சல் மேலும் அதிகமாகி உள்ளது.

இதன் காரணமாக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு ஜீவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்