/* */

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஒரே நாளில் 1.60 லட்சம் பக்தர்கள் தரிசனம்

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் ஒரே நாளில் 1.60 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஒரே நாளில் 1.60 லட்சம் பக்தர்கள் தரிசனம்
X

ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீநம்பெருமாள்.

பூலோக வைகுந்தம் என்று போற்றப்படும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையான தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி நேற்று மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3:30 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் ரத்தினங்கி பாண்டியன் கொண்டை கிளிமாலை அலங்காரத்துடன் புறப்பட்டு அதிகாலை 4:45 மணிக்கு ரெங்கா, ரெங்கா, கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் சொர்க்கவாசல் எனப்படும், பரமபத வாசலை கடந்தார். அப்போது பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பக்தர்களின் விவரம் கோவில் சார்பில் கொடுக்கப்பட்டது. இதில் தெற்கு கோபுர வாசல் வழியாக வந்த 1,37,507- பக்தர்களும், வடக்கு கோபுர வாசல் வழியாக 22,710 பக்தர்கள் என மொத்தம் 1,60,217 பக்தர்கள் நேற்று ஒரு நாள் மட்டும் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Updated On: 15 Dec 2021 3:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?