Begin typing your search above and press return to search.
திருச்சி அருகே ஏரி குழுமியில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி
திருச்சி அருகே ஏரி குழுமியில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள சித்தாநத்தம் கிராமத்தில் உள்ள ஏரியில் தொடர் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி வழிகிறது. இந்த ஏரியில் உள்ள குழுமி ஒன்று சேதம் அடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ள நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தண்ணீர் வெளியேறும் குழுமியை அடைத்து வருகின்றனர். சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த ஏரியில் மழைநீர் நிரம்பி வழிவதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.