/* */

தொட்டியம் அருகே கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் தகராறு- அடிதடி

கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதில் தகராறு. இருவர் மீதும் வழக்கு பதிவு

HIGHLIGHTS

தொட்டியம் அருகே கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால்  தகராறு- அடிதடி
X

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அலகரை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 50). இவர் நேற்று மணமேடு பஸ் நிறுத்தம் அருகே நின்றபோது, அந்த வழியாக வந்த மணமேடு கிராமத்தை சேர்ந்த ரவி (55) என்பவரிடம், தான் கடனாக கொடுத்த ரூ.4 ஆயிரத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் குச்சியாலும், கட்டையாலும் தாக்கிக்கொண்டனர்.

இதில் ரவியின் ஸ்கூட்டரை வடிவேல் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட காயம் காரணமாக இருவரும் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வடிவேல் மற்றும் ரவி இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் தொட்டியம் போலீசார் வடிவேல் மற்றும் ரவி ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 6:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்