/* */

மணப்பாறை அருகே தந்தையை தொடர்ந்து தீக்காயம் அடைந்த மகனும் உயிரிழப்பு

மணப்பாறை அருகே தந்தையை தொடர்ந்து தீக்காயம் அடைந்த மகனும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

HIGHLIGHTS

மணப்பாறை அருகே தந்தையை தொடர்ந்து தீக்காயம் அடைந்த மகனும் உயிரிழப்பு
X

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அதிகாரிப்பட்டியை சேர்ந்தவர் ரவி. கட்டிடத்தொழிலாளியான இவர் கடந்த 9-ந்தேதி டீ போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, கியாஸ் கசிவு ஏற்பட்டதை கவனிக்காததால் தீப்பற்றி கொண்டது. இந்த தீ ரவியின் உடலிலும் பற்றிக்கொண்டது. மேலும் அருகே கட்டிலில் படுத்திருந்த அவரது மகன்கள் தமிழ்செல்வன் (வயது 8), கார்த்திக் (6) ஆகியோர் மீதும் தீ பரவியது.

பலத்த தீக்காயம் அடைந்த 3 பேரும் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தனர். இதில் ரவி சிகிச்சை பலன் இன்றி கடந்த 12-ந்தேதி இறந்தார். இந்த நிலையில் நேற்று கார்த்திக்கும் சிகிச்சை பலனின்றி இறந்தான். மேலும் தமிழ்செல்வன் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த விபத்தின் போது ரவியின் மனைவி கடைக்கு சென்று இருந்ததால் அவர் தப்பினார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Dec 2021 10:58 AM GMT

Related News