/* */

லால்குடி அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலி- நண்பர் படுகாயம்

லால்குடி அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலி.

HIGHLIGHTS

லால்குடி அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலி- நண்பர் படுகாயம்
X

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கோவண்டாக்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்த அற்புதசாமி மகன் சாக்கரடீஸ் செல்வக்குமார் (வயது 35). இவரும், அவரது நண்பருமான புள்ளம்பாடி உதயநகரை சேர்ந்த வின்சென்ட் என்பவரது மகன் சார்லஸ் (வயது 32) என்பவரும் மோட்டார் சைக்கிளில் பூவாளூர் துணை மின் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென்று அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு சுவரில் மோதினர். இதில் சாக்கரடீஸ் செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் படுகாயம் அடைந்த சார்லஸ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 2 Dec 2021 11:09 AM GMT

Related News