/* */

வீட்டுமனை கேட்டு லால்குடி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

வீட்டுமனை கேட்டு லால்குடி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

வீட்டுமனை கேட்டு லால்குடி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
X

வீட்டுமனை கேட்டு லால்குடி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுக்க வந்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழரசூர் கிராமம்அண்ணா நகரில் வசிக்கும் 250 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கிராமத்தில் அரசு மூலம் வீட்டுமனைகள் கேட்டு கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் வட்டாட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே மீண்டும் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்துவிட்டு மீண்டும் லால்குடி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக 250க்கும் மேற்பட்ட பெண்கள் மனுவுடன் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர்.

இவர்கள் கூறுகையில் எங்கள் ஊரில் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இதில் அண்ணாநகரில் ஒரே வீட்டில் 3, 4,குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எங்களுக்கு தனியாக இடம் வாங்கி வீடு கட்டும் அளவிற்கு வசதி இல்லாத காரணத்தினால் அரசிடம் பலமுறை எங்கள் ஊர் அருகாமையில் பல ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதால் அந்த இடத்தில் எங்களுக்கு வீடு கட்டி வசிக்கும் அளவிற்கு எங்களுக்கு வீட்டுமனைகள் கேட்டு மனு கொடுத்துள்ளோம்.

இன்று மாவட்ட உதவி ஆட்சியரிடம் மனு கொடுக்கும் பொழுது அவர் எங்களை உங்கள் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுங்கள் விரைவில் உங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் நாங்கள் தற்பொழுது லால்குடி வட்டாட்சியரிடம் மனு கொடுப்பதற்காக காத்திருக்கிறோம் என்று கூறினார்கள்.

Updated On: 20 July 2022 2:28 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்