Begin typing your search above and press return to search.
திருச்சி அருகே நர்சிங் கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
திருச்சி அருகே நர்சிங் கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா நக்கம்பாடி அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் தனுசியா (வந்து 19). இவர் கல்லகம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனையில் மாணவியின் தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தனுசியா இன்று காலை சென்னையிலிருந்து திருச்சி சென்ற தேஜஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.