/* */

வணிகர்களுக்கு ஊரடங்கு நெறிமுறைகள் குறித்து விளாத்திகுளம் டிஎஸ்பி விளக்கம்

முழு ஊரடங்கு காலத்தில் வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் விளக்கம்.

HIGHLIGHTS

வணிகர்களுக்கு ஊரடங்கு நெறிமுறைகள் குறித்து   விளாத்திகுளம் டிஎஸ்பி விளக்கம்
X

விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ளபடி முழு ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விளக்கமளித்தார்.

நாளை 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் உள்ள காவல் ஆய்வாளர்கள், அனைத்து வணிகர் சங்கங்கள், ஓட்டுனர் சங்கங்கள், காய்கறி வியாபாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் வியாபாரிகள் அனைவருக்கும் முழு ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விரிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Updated On: 9 May 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!