/* */

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் மருத்துவ வசதி கேட்டு ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
X

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி துறைமுக சாலையில், மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான என்எல்சி கட்டுப்பாட்டில் உள்ள என்எல்சி தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட் (என்டிபிஎல்) அனல்மின் நிலையத்தில் உள்ள தலா 500 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் தினமும் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் பணிபுரியம் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த பொறியாளர் சுதாகர் கடந்த 21 ஆம் தேதி இரவு அனல் மின் நிலையத்தில் பணியில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அனல் மின் நிலையத்தில் உரிய சிகிச்சை கிடைக்காததால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், ஆபத்து காலங்களில் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவரோ, மருத்துவமனையோ இல்லாத நிலை உள்ளதாகவும், இதன் காரணமாகவே ஒப்பந்த ஊழியரான பொறியாளர் சுதாகர் உயிரிழந்துள்ளார் என்றும் ஒப்பந்த ஊழியர் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

இந்த நிலையில், பொறியாளர் சுதாகர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று அவரது குடும்பத்துக்கு என்டிபிஎல் நிர்வாகம் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் உயர்தர மருத்துவமனை மற்றும் மருத்துவர்களை பணி அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் என்டிபிஎல் அனல்மின் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, என்டிபிஎல் நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 23 March 2023 7:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  4. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  5. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  6. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!