/* */

தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் போதை பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் போதை பொருள் பறிமுதல்
X

தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை மதுரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் போதை பொருள் கடத்தல் சம்பவம் நடப்பதாக மதுரையில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மதுரையில் இருந்து மத்திய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடி வந்தனர். அவர்கள் தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் ஒருவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் அங்கு இருந்த சுமார் 9 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.60 லட்சம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போதை பொருளை பதுக்கி வைத்து இருந்ததாக ஜான்சன் உள்ளிட்ட 2 பேரை அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை மதுரைக்கு அழைத்து சென்றனர். மேலும் இந்த போதை பொருளை தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்து இருந்தார்களா என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Feb 2021 1:38 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!