/* */

கோவில்பட்டியில் விதிமுறைகளை மீறிய டீ கடைகள் மீது போலீசார் நடவடிக்கை

கோவில்பட்டியில் விதி முறைகளை மீறிய டீ கடைகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அதிகளவில் டீ கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சமூக இடைவெளி இல்லமால், பலர் முககவசம் அணியமாலும் இருந்து நீண்ட நேரம் டீ கடைகளில் இருப்பது தெரியவந்தது.

ஏற்கனவே கோவில்பட்டி பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வகையில் டீகடைகளில் மக்கள் கூட்டம் இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் இன்று கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் சாதரண உடையில் டீகடைகளுக்கு சென்று சோதனை நடத்தி விதிகளை மீறி அதிகமான மக்கள் கூட்டத்துடன் டீ விற்பனை செய்த கடைகளுக்கு அபாரதம் விதித்து நடவடிக்கை எடுத்தனஇதையெடுத்து கோவில்பட்டி நகரில் பெரும்பாலான டீ கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Updated On: 12 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!