/* */

கோவில்பட்டி பகுதியில் கனமழை: 5 ஆயிரம் ஏக்கர் மக்காசோள பயிர்கள் சேதம்

கோவில்பட்டி பகுதிகளில் கனமழை காரணமாக சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

கோவில்பட்டி பகுதியில் கனமழை: 5 ஆயிரம் ஏக்கர் மக்காசோள பயிர்கள் சேதம்
X

மழையில் சேதமடைந்த மக்களாசோள பயிர்களுடன் விவசாயிகள்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கழுகுமலை, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பலத்த காற்றுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது.

காற்று மற்றும் கன மழையின் காரணமாக கழுகுமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் வேரோடு நிலத்தில் சாய்ந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இதனைக் கண்ட விவசாயிகள் கண் கலங்கி நின்று தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது என்றும் எப்படி இதில் இருந்து மீள போகிறோம் என தெரியாமல்பெரும் துயரத்திற்கு உள்ளாகி உள்ளனர்.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு உள்ளன. கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, உள்ளிட்ட கடந்த இரண்டு வருடங்களாக சரிவர விளைச்சல் இல்லாத காரணத்தினாலும் அதிகாரிகள் பயிர் இழப்பீடு தொடர்பாக அரசுக்கு உரிய அறிக்கையை தாக்கல் செய்யாத காரணத்தினாலும் தங்களால் பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை பெற முடியவில்லை.

இருந்த போதிலும் இந்த ஆண்டு ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மக்காச்சோளம் பயிரை பயிரிட்டு உள்ளோம். தற்போது நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக பயிர்கள் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க பெற வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Updated On: 23 Nov 2023 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  7. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  8. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  9. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  10. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்