Begin typing your search above and press return to search.
திருவாரூரில் மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம்
ஏலம் விடப்பட்ட வாகனங்கள் மூலம் பெறப்பட்ட ரூ.20,48,000/- அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில், மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து, சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் பத்திரிகைகள் மூலம், பொது ஏலம் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 137 வாகனங்கள், சட்டவிதிமுறைகளுக்குட்பட்டு, ஏலம் விடப்பட்டது. அவ்வாறு ஏலம் விடப்பட்ட வாகனங்கள் மூலம் பெறப்பட்ட ரூ.20,48,000/அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது. ஏலம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பழகன் மேற்கொண்டார்.