திருவாரூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந் மார்ச் மாதம் இறுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருப்பதை தொடர்ந்து குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்துவதற்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 04.10.2021 ஆம் தேதி முதல் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 10.00 மணியளவில் நடைபெறும்.பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருதல் வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் .ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.