பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
திருவாரூர் மாவட்டத்தில் பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக அரசால் தீபாவளி பண்டிகையின்போது 30 நாட்களுக்குள் பட்டாசு கடை வைப்பதற்கான தற்காலிக உரிமங்களை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இ சேவை மையம் அல்லது பொது சேவை மையங்களில் கடை அமைக்கப்பட உள்ள இடத்தின் உரிமம் குறித்த ஆவணங்கள், ரூபாய் 500 கான அசல் செலுத்துச் சீட்டு, முகவரிக்கான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் 22.10.21 அன்று கொடுக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் வரும் 27.10 .21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்கள் மீது காவல்துறை வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர்கள் எரிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் சட்டம் 2008 இன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய உத்தரவுகள் வழங்கப்படும். எனவே தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விருப்பம் உள்ளவர்கள் வரும் 27.10.21க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆன்லைனில் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.