/* */

திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

திருவாரூரில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
X

திருவாரூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மாநிலம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கடந்த ஆட்சியில் சங்க உறுப்பினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், ஊராட்சி ஒன்றியங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தில் கணினி உதவியாளராக பணிபுரியும் அனைவருக்கும் அரசாணையின்படி இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் புஷ்பநாதன், மாவட்ட செயலாளர் செந்தில், மாநில தணிக்கையாளர் ஜம்ரூத் நிஷா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 March 2022 1:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு