திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
திருவாரூரில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மாநிலம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கடந்த ஆட்சியில் சங்க உறுப்பினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், ஊராட்சி ஒன்றியங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தில் கணினி உதவியாளராக பணிபுரியும் அனைவருக்கும் அரசாணையின்படி இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் புஷ்பநாதன், மாவட்ட செயலாளர் செந்தில், மாநில தணிக்கையாளர் ஜம்ரூத் நிஷா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.