/* */

திருவாரூரில் கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்

திருவாரூர் கோ-ஆப் டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவாரூரில் கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்
X

திருவாரூர் கோ ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர் பழைய ரயில் நிலையம் அருகே உள்ள தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்சில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இந்த ஆண்டிற்கான 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து முதல் விற்பனையை வாடிக்கையாளருக்கு வழங்கினார்.

இங்கு புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு,ஆரணி, திருபுவனம் பட்டு புடவைகள் , கோவை கோரா காட்டன் புடவை , விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1 கோடியே 25 லட்ச ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கைத்தறித்துறை உதவி இயக்குனர் வெற்றிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 18 Oct 2021 6:26 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...