/* */

திருத்துறைப்பூண்டியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து

திருத்துறைப்பூண்டி அருகே கனமழை காரணமாக ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து அருகில் இருந்த கூரை வீட்டின் மேல் விழுந்தது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து
X

திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் கிராமத்தில் பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் செல்லத்துரை (42) விவசாய கூலி தொழிலாளி .இவரது ஓட்டு வீடு கஜா புயலில் சேதமடைந்து. இதனை சீரமைக்க போதிய வருமானம் இல்லாததால் ஓட்டு வீட்டின் அருகில் கூரை வீடு ஒன்றை கட்டி வசித்து வந்துள்ளனர்.

நேற்று இரவு பெய்த மழையால் காலையில் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து கூரை வீட்டின் மேல் விழுந்துள்ளது. செல்லத்துரை வழக்கம் போல் காலையில் வெளியில் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் மாமியார் வசந்தா இருவரும் வீட்டில் இருந்து வந்த நிலையில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .கூரை வீட்டில் இருந்த பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது.

Updated On: 1 Nov 2021 12:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்