/* */

மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

திருவாரூர் அருகே மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது டிரைவர் உயிர் தப்பினார்

HIGHLIGHTS

மது பாட்டில்கள் ஏற்றி வந்த  லாரி கவிழ்ந்தது
X

திருவாரூர் அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அமராவதி வெட்டாறு பாலம் உள்ளது. சம்பவத்தன்று இரவு மன்னார்குடியில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி இந்த பாலத்தின் வழியாக காஞ்சீபுரம் நோக்கி சென்றது. லாரி பாலத்தின் அருகே உள்ள பஸ்நிறுத்தம் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. ஆனால் லாரியில் ஏற்றி இருந்த மதுபாட்டில்கள் பாதுகாப்பாக மூடப்பட்டிருந்ததால் மதுபாட்டில்கள் சிதறாமல் அப்படியே இருந்தன. மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Updated On: 21 April 2021 3:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை