/* */

மதங்களுக்கு அப்பாற்பட்டு தினமும் வீடு வீடாக பிரியாணி பொட்டலம் வினியோகம்

மதங்களுக்கு அப்பாற்பட்டு திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் வீடு வீடாக பிரியாணி பொட்டலங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

மதங்களுக்கு அப்பாற்பட்டு தினமும் வீடு வீடாக  பிரியாணி பொட்டலம் வினியோகம்
X

திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் வீடு வீடாக பிரியாணி பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வதை ரம்ஜான் நோன்பு பெருவிழாவின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. முகமதுநபிகள் நாயகம் போதனையின்படி மதநல்லிணக்கம், மனிதநேயம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் விதமாக திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி பகுதி வாழ் மக்கள் ஒருங்கிணைந்து ரமலான் மாதம் 30 நாட்களிலும் தங்களால் இயன்ற உதவியை மக்களை தேடி சென்று வழங்கி வருகின்றனர். அந்தவகையில் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு பல்வேறு மதங்களை சே ர்ந்த 25 க்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து தினசரி இரவு 11 மணிக்கு பிரியாணி சமைக்கும் பணியினை தொடங்கி நள்ளிரவு 1 மணியளவில் நிறைவு செய்கின்றனர்.


அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.60,000 என்ற அடிப்படையில் பிரியாணியினை தயார் செய்து வரும் இவ்வமைப்பினர் பின்னர் அவற்றை ஆயிரக்கணக்கில் பொட்டலமாக கட்டி விநியோகிக்கும் பணியினை மேற்கொள்கின்றனர். பின்னர் இத்தகைய பிரியாணி பொட்டலகங்களை நள்ளிரவு 2 மணிக்கு மேல் பொதக்குடி பகுதி மட்டும் இல்லாமல் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கும் சென்று ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்டி விநியோகித்து வருகின்றனர். இதுதவிர அரசு மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் பணியாற்றும் அனைத்துவகை ஊழியர்கள், நோயாளிகளது பாதுகாவலர்கள், பேருந்துநிலையங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், சாலையோரங்களில் இரவு நேரங்களில் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கும், இத்தகைய பிரியாணி பொட்டலங்கள் அதிகாலை 4 மணி வரை அவரவர்களது இருப்பிடங்களுக்கு சென்று வழங்கிவருகின்றனர்.

இன்றைக்கு நாடு முழுவதும் மதத்தின் பெயரால் ஏற்படும் மோதல்கள் மக்கள் மத்தியில் ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைத்து வருகின்றன. இந்நிலையை மாற்றும் வகையில் மனிதனாக பிறந்த அனைவரும் ஒரே குடையின் கீழ் வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பொதக்குடி பகுதியில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுமாயின் மனிதநேயம், மதநல்லிணக்கம் மேன்மேலும் தலைத்தோங்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

Updated On: 21 April 2022 1:31 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...