/* */

5 மாதத்திற்குப்பின், தேக்கடி சுற்றுலாத்தலம் நாளை மறுநாள் முதல் திறப்பு

5 மாதங்களுக்கு பின், தேக்கடி சுற்றுலாத்தலம் நாளை மறுநாள் முதல் திறக்கப்படும் என கேரள சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

5 மாதத்திற்குப்பின், தேக்கடி சுற்றுலாத்தலம் நாளை மறுநாள் முதல் திறப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டம் குமுளியில் இருந்து நான்கு கி.மீ., தொலைவில் உள்ள தேக்கடி சுற்றுலாத்தலம். தேக்கடி புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியில் இந்த சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இந்தியாவின் மிகவும் சிறந்த சுற்றுலாத்தலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு ஏராளமானோர் வருகைபுரிவார்கள்.

இங்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் படகு சவாரி செல்வது தான் சிறப்பு அம்சம். படகு சவாரி செல்லும்போது பல வகையான வனவிலங்குகளை பார்த்து ரசிக்கலாம். இங்கு குளிர்ச்சியாகவும் மிகவும் அற்புதமானதாகவும் இருக்கும்.கொரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் இந்த சுற்றுலா தளம் திறக்கப்பட்டது.

தற்போது கேரளா முழுவதும் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சுற்றுலா தலமும் வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி திங்கள் கிழமை முதல் திறக்கப்படுகிறது என கேரள சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதியில்லை. குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 Aug 2021 12:09 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  3. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  4. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  5. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  6. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  7. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  9. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  10. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு