Begin typing your search above and press return to search.
தேனி மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கொரோனா தொற்று
Today Theni News -தேனி மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கொரோனா தொற்று
HIGHLIGHTS
Today Theni News - தேனி மாவட்டத்தில் நான்கு மாத இடைவெளிக்கு பின்னர் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இரண்டு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மறுநாள் ஆறு பேருக்கும், அடுத்து ஒன்பது பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக தற்போது (நான்காவது அலையில்) தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாத நிலையில் மக்கள் மீண்டும் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவ, சுகாதாரத்துறைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2