/* */

காமாட்சிபுரம் கிராமசபை கூட்டத்தில் கண்கலங்கிய தேனி மாவட்ட கலெக்டர்

காமாட்சிபுரம் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற தேனி கலெக்டர் முரளீதரன் குழந்தை திருமணம் வேதனை அளிப்பதாக கூறி கண்கலங்கினார்.

HIGHLIGHTS

காமாட்சிபுரம் கிராமசபை கூட்டத்தில் கண்கலங்கிய தேனி மாவட்ட கலெக்டர்
X

தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் துாய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் முரளீதரன் குப்பைகளை சேகரித்தார்.

தேனியில் துாய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து, குப்பைகளை அகற்றிய கலெக்டர் முரளீதரன் காமாட்சிபுரம் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசும் போது கண் கலங்கினார்.

தேனியில் இன்று காந்திஜெயந்தியை தொடர்ந்து கதர் அங்காடிகளில் 30 சதவீதம் தள்ளுபடி விற்பனையினை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார். பின்னர் புதிய பஸ்ஸ்டாண்டில் தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். துாய்மை இந்தியா திட்டத்தையும் தொடங்கி வைத்து, அரைமணி நேரம் பஸ்ஸ்டாண்ட் முழுக்க சுற்றி குப்பைகளை சேகரித்து அகற்றினார்.

பின்னர் சின்னமனுார் ஒன்றியம் காமாட்சிபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனார். அப்போது பேசும் போது, 'தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது தனக்கு பெரும் வேதனை அளிக்கிறது. இதனை நுாறு சதவீதம் தடுத்து நிறுத்தும் வரை ஓயமாட்டேன்' எனக்கூறி கண்கலங்கினார். அங்கிருந்த மக்கள், கலெக்டரின் எண்ணப்படி குழந்தை திருமணத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்தனர்.

Updated On: 2 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  2. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  3. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  4. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  5. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  6. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  7. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  8. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  9. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  10. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்