/* */

பழங்குடியின மக்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை செலுத்திய கலெக்டர்

இனிமேல் ஆண்டுதோறும் இத்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக பணம் கட்ட வேண்டும் என பழங்குடியின மக்களுக்கு அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

பழங்குடியின மக்களுக்கு இன்சூரன்ஸ்  பிரீமியம் தொகை செலுத்திய கலெக்டர்
X

தேனி மாவட்டம் சிறைக்காடு கிராம பழங்குடியின மக்களுடன் கலெக்டர் முரளீதரன்

தேனி மாவட்டத்தில் செல்லான்காலனி, சிறைக்காடு கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வங்கிகள் மூலம் பிரதமர் காப்பீடு திட்டத்தில் வழங்கப்படும் பாதுகாப்புத்திட்டத்திற்கான பிரீமியம் தொகையினை கலெக்டர் முரளீதரன் செலுத்தினார்.

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் 330 ரூபாய் ஆண்டு பிரிமீயம், 12 ரூபாய் விபத்து காப்பீடு பிரீமியம் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. விபத்தில் பலியானாலோ, இயற்கை இறப்பு ஏற்பட்டாலோ வங்கிகள் 4 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்குகின்றன. இந்த திட்டம் பற்றி சிறைக்காடு, செல்லான்காலனி மக்கள் அறிந்திருக்கவில்லை. இந்த கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் முரளீதரன் இந்த திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கி கூறினார். மக்கள் தங்கள் கையில் தற்போது பணம் இல்லை என கூறியதால், வங்கி கணக்கு வைத்திருந்த 68 பேருக்கும் ஓராண்டு பிரீமியம் தொகையினை கலெக்டர் முரளீதரன் செலுத்தினார். மீதம் உள்ளவர்களை வங்கிக்கணக்கு செலுத்தி பிரீமியம் செலுத்த அறிவுறுத்தினார். இனிமேல் ஆண்டுதோறும் இத்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக நீங்கள் பணம் கட்ட வேண்டும் என பழங்குடியின மக்களுக்கு அறிவுறுத்தினார்.

கொரோனா ஊசி போட்டுக்கொள்ள அச்சம் தெரிவித்த பழங்குடியின மக்களிடம், உங்கள் ஊரில் கொரோனா முகாம் நடத்தும்போது நாள் முழுவதும் உங்களுடன் இருப்பதாகவும், எந்த பாதிப்பும் வராது, நானும் தடுப்பூசி போட்டுள்ளேன். நாட்டில் 75 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், அச்சப்படதேவையில்லை என விளக்கிக் கூறினார். இதையடுத்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறோம் என பழங்குடியின மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.

Updated On: 17 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  2. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  5. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  8. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  9. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  10. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...