/* */

தேனி மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவதில் மோசடி கண்டு பிடிப்பு

தேனி மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் விவரங்களை அறிந்த விசாரணைக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவதில் மோசடி கண்டு பிடிப்பு
X

தேனி கலெக்டர் முரளீதரன், 'ஆதார் பதிவுகளை அடிப்படையாக வைத்து தேனி மாவட்டத்தில் விதிமீறி முதியோர் உதவித்தொகை பெறும் 7700 பயனாளிகளை வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய குழுக்கள் அமைத்துள்ளார்.

இந்த குழுவினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. தற்போது ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி கூட்டுறவு வேளாண் வங்கிகள், தேசிய வங்கிகளிலும் நகை அடகு வைத்து அதனை திருப்பி உள்ளனர். உஜ்வாலா திட்டத்தில் இரண்டு காஸ் சிலிண்டர் பெற்று பயனடைகின்றனர். பத்திரப்பதிவுத்துறை ஆவணங்களில் முதியோர் உதவி தொகை பெறுவோர் சொத்துக்கள் வாங்கியும், விற்றும் உள்ளதும் தெரியவந்துள்ளது. வசதி படைத்தவர்கள் முதியோர் உதவி தொகை பெறுகின்றனர். இந்த விவரங்களை அறிந்த விசாரணைக்குழு கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

Updated On: 24 July 2022 1:18 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!