/* */

பெரியகுளம் அருகே டிஸ்சார்ஜ் ஆன அன்றே அண்ணனை பழிதீர்த்த தம்பி

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு செல்லும் முன்பே, தனது அண்ணனை வெட்டி பழித்தீர்த்தார் அவரது உடன் பிறந்த தம்பி.

HIGHLIGHTS

பெரியகுளம் அருகே டிஸ்சார்ஜ் ஆன அன்றே  அண்ணனை பழிதீர்த்த தம்பி
X

தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வார்பட்டி பால்பண்ணை தெருவை சேர்ந்தவர்கள் வீரமுத்து, 47, பாண்டியராஜன், 40. அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. அடிக்கடி இவர்களுக்குள் சண்டை நடக்கும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமுத்து தனது தம்பியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். பலத்த காயமடைந்த பாண்டியராஜன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் சில்வார்பட்டி வந்து இறங்கினார்.

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த தனது அண்ணன் வீரமுத்துவை பார்த்தார். உடனே தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து சராமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த வீரமுத்து நிலைகுலைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்தார். தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேவதானப்பட்டி போலீசார் பாண்டியராஜனை கைது செய்தனர்.

Updated On: 8 May 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை