/* */

தேனியில் பெர்மிட், எப்.சி. இல்லாத ஆட்டோக்கள்; லைசென்ஸ் இல்லாத டிரைவர்கள்

தேனியில் இயக்கப்படும் பெரும்பாலான ஆட்டோக்கள் முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டு வருவதால் போலீசாருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனியில் பெர்மிட், எப்.சி. இல்லாத  ஆட்டோக்கள்; லைசென்ஸ் இல்லாத டிரைவர்கள்
X

மாதிரி படம் 

தேனி நகர் பகுதியில் மட்டும் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில் சரி பாதி அளவு மேக்ஸிகேப் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் இந்த ஆட்டோக்களை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதில் பெரும்பாலான ஆட்டோக்கள் உரிமம் இல்லாமலும், எப்.சி., இல்லாமலும், இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு முறையான ஆவணங்கள் இல்லாமலும் இயக்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும்பாலானோருக்கு ஓட்டுனர் உரிமமும் இல்லை. இது போன்ற குறைபாடு உள்ள 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

இன்னும் சோதனை தொடரும். முறையான ஆவணங்கள் இல்லாமலும், விதிகளுக்கு உட்படாமலும் இயக்கப்படும் ஆட்டோக்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்படும். மேக்ஸிகேப் வாகனங்களும் இதே நடைமுறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது என ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?