/* */

பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி, போலீசார் விசாரணை

HIGHLIGHTS

பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி
X

ஏடிஎம் மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் பேங்க் ஆப் பரோடா வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இம்மையத்தில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பணம் நிரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரை கம்பியை கொண்டு உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு ஏடிஎம் மையம் உடைக்கப்படுவது குறித்து சிக்னல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வங்கி நிர்வாகம் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் மக்கள் அங்கு வருவதை பார்த்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால், உரிய நேரத்தில் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது.

கொள்ளை முயற்சி சம்பவத்தில் மூன்று நபர்கள் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஏடிஎம் மையத்தில் பதிவான கைரேகைகளை தடய அறிவியல் நிபுணர்கள் பதிவு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  4. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  5. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  8. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  10. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!