/* */

திருவையாறு அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

திருவையாறு அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவையாறு அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு
X

விபத்து ஏற்படுத்திய நெல் அறுவடை இயந்திரம்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள களர்பட்டி பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . இந்த பகுதிகளில் உள்ள வயல்களில் அறுவடை பணிக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அறுவடை எந்திரங்கள் கொண்டு வந்து அறுவடை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் களர்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் வயலில் புதுக்கோட்டை மாவட்டம் மாங்கொல்லை கீழப்பட்டியை சேர்ந்த கார்த்தி (வயது 30) என்பவர் அறுவடை எந்திரத்தின் மூலம் அறுவடை பணிகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அறுவடை எந்திரத்தில் திடீர் என்று கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்காக கார்த்தி அறுவடை எந்திரத்தின் மேல் ஏறி பெல்ட்டை சரி செய்ய முயன்று உள்ளார். அப்போது கார்திக்கின் கழுத்து பெல்டில் சிக்கி இறுக்கி உள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், அறுவடை எந்திரத்தில் சிக்கி இருந்த கார்த்திக்கை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 March 2022 9:20 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!