/* */

திருவையாறில் தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி

திருவையாறு அருகே நேற்றிரவு பெய்த மழையால் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலியானார்.

HIGHLIGHTS

திருவையாறில் தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி
X

திருவையாறில் நேற்று பெய்த மழையில் இடிந்து விழுந்த தொகுப்பு வீடு.

திருவையாறு அடுத்த மருவூர் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகள் தேவகி, 45. மருமகன் சுப்பிரமணி. இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்றிரவு பெய்த தொடர் மழையால், வீடு இடிந்து விழுந்தது. இதில் தேவகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் தேவகியின் கணவன் சுப்பிரமணி, தேவகியின் தந்தை கல்யாணசுந்தரம் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த மருவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்பு வீரர்கள் இடிபாட்டில் சிக்கிய தேவியின் உடலை மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 3:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...