Begin typing your search above and press return to search.
தஞ்சையில் பத்திரிகையாளர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைப்பு
தஞ்சையில், பத்திரிகையாளர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை, துணை மேயர் அஞ்சுகம் பூபதி தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
கோடைகாலம் தொடங்கியதை அடுத்து கடும் வெப்பம் வாட்டி வருகிறது. இதையடுத்து தஞ்சை மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சார்பில், ஆற்றுப் பாலம் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை துணை மேயர் அஞ்சுகம் பூபதி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழங்கள் ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார். பொது மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தினமும் நீர் மோர் மற்றும் பழவகைகள் வழங்கப்பட உள்ளது.