தஞ்சை மாநகராட்சியில் இன்று 4 மையங்களில் 400 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி
தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது
HIGHLIGHTS
தஞ்சை மாநகராட்சியில் இன்று 04 மையங்களில் 400 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்படும் என்றும், கோவாக்சின் கையிருப்பு இல்லாததால் கோவிஷீல்டு மட்டுமே போடப்படும் என மாநகராட்சி அறிவிப்பு.
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 04 மையங்களில் 400 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர் பள்ளியில் 100 நபர்களுக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 100 நபர்களுக்கும், லட்சுமி நாராயணன் பள்ளியில் 100 நபர்களுக்கும், கரந்தை மாநகராட்சி பள்ளியில் 100 என நான்கு மையங்களில் 400 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுகிறது. மேலும் கோவாக்சின் கையிருப்பு இல்லாததால் எந்த மையங்களிலும் இந்த ஊசி லுத்தப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.