தஞ்சையில் மினி பஸ்கள் இயக்கப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி
தஞ்சை மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்கப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி அளித்தார்.
HIGHLIGHTS
நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும், தொழிற்சங்க சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 70 முதல் 80 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக பேருந்து ஏற வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்துகள் இயக்கப்படாததால், வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் இயக்குமாறு உத்தரவுவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சை மாவட்டத்தில் 459 வழித்தடங்களில் 350 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், 75 முதல் 80 சதவீதம் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், பேருந்து இயங்காத வழித்தடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.