/* */

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலருக்கு கொலை மிரட்டல்: பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

அனுமதியின்றி பாஜவினர் வைத்திருந்த டிஜிட்டல் பேனரை நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையில் ஊழியர்கள் வந்து பேனரை அகற்றினர்

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலருக்கு   கொலை மிரட்டல்: பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது
X

தஞ்சாவூரில் பாஜக சார்பில் வைக்கப்பஅனுமதியின்றி பாஜவினர் வைத்திருந்த டிஜிட்டல் பேனரை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையில் ஊழியர்கள் அங்கு வந்து பேனரை அகற்றினர்.ட்ட டிஜிட்டல் பேனரை அகற்றிய தஞ்சாவூர் மாகராட்சி நகரமைப்பு அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகிகள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ உள்ளிட்ட 9 பேரை தேடி வருகின்றனர்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிடக்கோரி வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் நேற்று தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே காலை முதல் மாலை வரை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், தடையுத்தரவை மீறி அக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத நிகழ்ச்சி தொடர்பாக அக்கட்சியினர் தஞ்சாவூர் எலிஸா நகர் அருகே சாலையில் உரிய அனுமதியின்றி டிஜிட்டல் பேனரை வைத்திருந்தனர். தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையில் அங்கு வந்து, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றினர். அப்போது உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூரிலிருந்து ஒரு வேனில் அவ்வழியே வந்து கொண்டிருந்த பாஜவினர், மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட பாஜக தலைவர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ உள்ளிட்ட பாஜகவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நகரமைப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பாக, நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸார் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, லால்குடியைச் சேர்ந்த தெற்கு மண்டலத் தலைவர் அசோக்குமார் (44), அறந்தாங்கி நகர செயலாளர் இளங்கோவன் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ உள்ளிட்ட 9 பேரை தேடி வருகின்றனர்.

Updated On: 6 Aug 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்