தஞ்சையில் மாநகராட்சி சார்பாக 5 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்
தஞ்சை மாநகராட்சி சார்பாக இன்று 5 இடங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
மாநகராட்சி சார்பாக ஆசிரியர்கள், முன்களப்பணியாளர்,பூச்சந்தை வியாபாரிகளுக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி போடும் பணி இன்று நடைபெறுகிறது.
மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக இன்று ஐந்து இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற இருக்கிறது. இதில் கில்டு ஆப் சர்வீஸ் கட்டிடத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி ஆசிரியர்களுக்கும் − பேராசிரியர்களுக்கும் போடப்படுகிறது. அதேபோல், கரந்தை மாநகராட்சி பள்ளியில் முன் களப்பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் போடப்படுகிறது.
பூக்கார தெருவில் உள்ள பூச்சந்தையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி என மூன்று சிறப்பு மையங்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல மேம்பாலம் அருகில் உள்ள இந்திய குழந்தைகள் நல சங்கம் கட்டடத்திலும், வண்டிக்கார பகுதியில் முகாம் மூலம், அனைவருக்கும் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.
எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தடுப்பூசி போட வரும்போது ஆதார் கார்டின் ஜெராக்ஸையை எடுத்து வரவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.