/* */

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள்

சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

HIGHLIGHTS

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள்
X

பைல் படம்

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக தஞ்சை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

கடந்த09.11.2022 அன்று வெளியிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வருகிற 26.12.2022 வரை வைக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக 12.11.2022 (சனிக்கிழமை) 13.11.2022 (ஞாயிற்றுகிழமை) ஆகிய இரு நாள்கள் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து, வருகின்ற 26.11.2022 (சனிக்கிழமை), 27.11.2022 (ஞாயிற்றுகிழமை) ஆகியநான்கு நாட்களிலும் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுவுள்ளது.

இச்சிறப்பு முகாமில் 01.01.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 01.01.2005 அன்று அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம்எண் 6- ஐ அருகாமையிலுள்ள வாக்குச் சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைபடத்தினை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

மேலும்இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7 -ஐ பூர்த்தி செய்தும், அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயர், உறவுமுறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8 -ஐ பூர்த்தி செய்தும், இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6பி -ஐ பூர்த்தி செய்தும் இச்சிறப்பு முகாமில் வழங்கலாம்.

பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45மணி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்

மேலும், நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் Voters Help Line என்ற Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்கள் அறிய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்

Updated On: 13 Nov 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  3. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  4. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  6. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  7. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  8. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  9. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்