Begin typing your search above and press return to search.
தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடுவேன் பறிமுதல்
போலீசார் லோடு வேனை வழிமறித்தபோது வேனில் வந்தவர்கள் தப்பியோடியதால் மணல் கடத்திய அந்தவாகனத்தை பறிமுதல் செய்தனர்
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அனுமதியின்றி மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடுவேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கீழபொதகிரி குட்டி வாய்க்கால் பகுதியில் சப்-இனஸ்பெக்டர் கோவிந்தராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரையரசன் மற்றும் போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு லோடு வேனை வழிமறித்தனர். இதில் போலீசாரை கண்டவுடன் லோடு வேனில் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர். தொடர்ந்து போலீசார் அந்த வேனை சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடுவேனை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.