Begin typing your search above and press return to search.
சனி பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம்
சனி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
HIGHLIGHTS
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும். தை மாதத்தின் முதல் சனி பிரதோஷமான இன்று, பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், திரவியம், பால், தயிர், அரிசி மாவு, எலுமிச்சை சாறு, கரும்புச் சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. சனி பிரதோஷத்தின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் யாரும் இன்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.