Begin typing your search above and press return to search.
தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தற்போது கோடை சாகுபடியான உளுந்து, எள்ளு ஆகியவை பயிரிடப்பட்டுள்ளதால், இந்த கோடை மழையால் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.