Begin typing your search above and press return to search.
தஞ்சை பெரியகோயிலில் பிரதோஷ வழிப்பாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
HIGHLIGHTS
தஞ்சை பெரிய கோவிலில் தனி மண்டபத்தில் ஒரே கல்லால் 13 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட நந்தியம்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பால், தயிர், சந்தனம், திரவிய பொடி, மஞ்சள் பொடி, விபூதி. தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை மங்கள வாத்தியங்கள் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
அருகம்புல். வில்வ இலை, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானை வழிப்பட்டனர்.