/* */

தஞ்சை பெரியகோயிலில் பிரதோஷ வழிப்பாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சை பெரியகோயிலில் பிரதோஷ வழிப்பாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

நந்தியம்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

தஞ்சை பெரிய கோவிலில் தனி மண்டபத்தில் ஒரே கல்லால் 13 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட நந்தியம்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பால், தயிர், சந்தனம், திரவிய பொடி, மஞ்சள் பொடி, விபூதி. தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை மங்கள வாத்தியங்கள் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

அருகம்புல். வில்வ இலை, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானை வழிப்பட்டனர்.

Updated On: 28 Feb 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!