Begin typing your search above and press return to search.
தஞ்சாவூர் மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தஞ்சாவூர் மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
HIGHLIGHTS
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை, அரம்ப சுகாதார நிலையம் என மாவட்டம் முழுவதும் 117 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது. குறிப்பாக தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு 8 மையங்கள் மூலம்தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால், அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவாதாகவும், மீண்டும் மாநகராட்சிக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்த பின் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.