/* */

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பால் பரபரப்பு: போலீசார் விசாரணை

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பால் பரபரப்பு: போலீசார் விசாரணை
X

உடைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை. 

தஞ்சை வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச் சுவரை ஒட்டி நான்கடி உயரம் கொண்ட சிமெண்ட் தூணில் இரண்டு அடி உயரத்தில் எம்ஜிஆர் சிலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

சிலையின் அருகே டீக்கடை ஒன்று உள்ளது. இரவு டீ கடைக்காரர் கடையை மூடிவிட்டு மீண்டும் அதிகாலை 5 மணிக்கு கடையை திறக்க வந்தபோது அருகில் இருந்த எம்ஜிஆர் சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அதிமுகவினருக்கு தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு வந்த அதிமுகவினர் காணாமல்போன எம்.ஜி.ஆர் சிலையினை அக்கம்பக்கத்தில் தேடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை தெற்கு காவல் துறையினரும் அக்கம்பக்கத்தில் தேடிய நிலையில், அருகே இருந்த பெட்டிக் கடையின் பின்புறம் எம்ஜிஆர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் மீட்கப்பட்ட சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது. தற்போது அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலையை பெயர்த்து தூக்கி வீசிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 25 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?