சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரிடம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31 .10 .2022 ஆகும்
HIGHLIGHTS
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995 -ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவொருக்கு ரூ. 5.00.000- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும் ) விருது தொகையும் ஒரு பவுன் தங்கப்பதக்கமும். தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் தமிழக முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் "சமுகநீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வார்க்கைத் தரத்தினை மேம்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள்களது விண்ணப்பத்தினை மாவட்டஆட்சித் தலைவருக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களது விண்ணப்பத்தை தங்களின் சுயவிவரம். முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
2022 -ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31 .10 .2022 ஆகும். மேலும் விவரங்களுக்கு தஞ்சா வூர் மாவட்டஆட்சியரகத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.