'பாண்டியன் உயிருக்கு ஆபத்து' -தஞ்சாவூர் எஸ்.பி.அலுவலகத்தில் புகார்
விவசாய சங்க தலை வர் ‘பாண்டியன் உயிருக்கு ஆபத்து’ -என தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட தலைவர் பழனியப்பன் தலைமையில் விவசாயிகள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த புகார் மனுவில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு மற்றும் மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி அண்மையில் முற்றுகை போராட்டம் நடத்தினார். இதன் விளைவாக சில நபர்கள் தூண்டுதலின் பெயரில், செல்போன் வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களின் மூலம் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத நபர் எங்களது விவசாய சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் அவர்களின் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக, அவரை புண்படுத்தும் விதமாக "டேய் பொறம்போக்கு பாண்டியா, நீ காங்கிரஸ் கட்சியை பற்றி பேசினால், தமிழ்நாட்டில் எங்கேயும் நடமாட முடியாது" என அசிங்கமாக திட்டி பதிவுகளை பரப்பி வருகின்றனர். பச்சை நிற துண்டு, சிவப்பு நிறமாக மாறிவிடும் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளனர். மேற்படி நபர்களால், உயிருக்கு ஆபத்து நேரும் பட்சத்தில் மேற்படி நபர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அவருக்கு பாதுகாப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.