தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று 8 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்
தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று 8 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. கோவாக்ஷீன் தடுப்பூசி கையிருப்பு இல்லை என மாநகராட்சி ஆனையர் அறிவிப்பு.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் அளவுகள் குறைவாக இருப்பதால் முதலில் வரும் பொதுமக்களுக்கு மட்டுமே தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. இதேபோல் இன்று மாநகராட்சி சார்பில் எட்டு இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா அரங்கத்தில் 400 நபர்களுக்கும், கரந்தை மாநகராட்சி பள்ளி 250 நபர்களுக்கும், வண்டிக்காரத் தெரு பள்ளியில் 100 நபர்களுக்கும், அண்ணாநகர் பள்ளியில் 100 நபர்களுக்கு என குறைந்தளவே டோக்கன் வழங்கப்படுகிறது. எனவே முதலில் வரும் நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும், மேலும் இன்று அனைத்து மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. கோவாக்ஷீன் தடுப்பூசி போடவில்லை என மாநகராட்சி ஆனையர் ஜானகிரவீந்திரன் தெரிவித்துள்ளார்.