தஞ்சையில் பாரதிய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
கொரோனா ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களில் திறக்க அனுமதி இல்லை.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள், திரையரங்குகள் உள்ளிட்டவைகள் திறந்து இருக்கும் நிலையில், வழிபாட்டு தலங்களை தமிழக அரசு வார இறுதி நாட்களில் மூடி உள்ளதை கண்டித்தும் அனைத்தும்
அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களையும் திறந்து பக்தர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி யும்பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று தமிழகத்தில் 12 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இதேபோல் தஞ்சாவூர் பெரிய கோவில் முன்பு அக்காட்சி மாநில துணைச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோவில்கள் தேவாலயங்கள் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் அனைத்து நாட்களிலும் திறக்க வேண்டும் என அப்போது வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.