/* */

பயிர்களை பாதுகாக்க சூடோமோனாஸ்: விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள்

பல்வேறு நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள்சூடோமோனாஸ் வாங்கி பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

பயிர்களை பாதுகாக்க சூடோமோனாஸ்: விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள்
X

தளிக்கோட்டை சந்திரசேகரின் ஏடீடி51 விதை பண்ணை நாற்றங்காலில் பயிர் மேலாண்மை குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி எடுத்துக் கூறினார்.

பல்வேறு நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள்சூடோமோனாஸ் வாங்கி பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கூறுகையில், தற்போது நிலவும் பருவ கால சூழலில் அதிக வெப்பமும் மழையை தொடர்ந்து ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகளும் காற்றின் ஈரப்பதத்தை அதிகரித்து நோய்க்கிருமிகளை ஈர்த்து வளரும் பயிரை தாக்கி மகசூலை குறைக்கின்றது. அனைத்து பயிர்களிலும் மண்ணின் மூலம் பரவும் நோய்களான வேரழுகல் நோய், வாடல் நோய், நாற்றுஅழுகல் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதுடன் குலை நோய் இலை உறை கருகல் நோய் இலைப்புள்ளி நோய் மற்றும் ஆந்த்ரக்னோஸ் போன்ற நோய்களின் பாதிப்பையும் குறைக்கிறது.

சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பயிரில் ஏற்படக்கூடிய நோய்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு பொருள்களான பயோலூட்ரின் மற்றும் பைரால் நைட்ரின் போன்றவற்றை உற்பத்தி செய்து நேரடியாக நோயை கட்டுப்படுத்துகிறது மறைமுக நோய் எதிர்ப்பு முறையில் நோய் உண்டாக்கும் காரணிகளை தாக்காமல் நோய் எதிர்ப்பு நொதிகளை தாவரத்தில் அதிக அளவில் சுரக்கச் செய்து அதன் மூலம் நோய்க்காரணிகளின் வளர்ச்சி வீதத்தை கட்டுப்படுத்துகிறது.

இந்த பாக்டீரியத்தின் சிறப்பம்சம் பயிர் வளர்ச்சி ஊக்கி ஹார்மோன்களான ஆக்சின், ஜிப்ரலின் ஆகியவற்றை சுரந்து பயிரின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. நெல்லில் நோய் வருமுன் காக்க கிலோவுக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனஸ் கலந்து அந்த தண்ணீரில் விதையை ஊற வைத்து பின் பயன்படுத்த வேண்டும். நாற்றங்கால் நிலையில் இருந்தால் நாற்றுகளை அரை மணி நேரம் வரை ஊற வைத்து பின் நட வேண்டும். நாற்று நட்ட 30 நாட்களுக்கு பின் 2.5 கிலோ சூடோமோனஸ் கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எருவுடன் கலந்து இட வேண்டும். நடவு நட்ட 45 நாட்களுக்குப் பின் 0.5 சத சூடோமோனஸ் கரைசலை நோயின் தீவிரத்தை பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கலாம். மற்ற அனைத்து வித பயிர்களுக்கும் விதைப்பிற்கு முன்பு எக்டருக்கு 2 .5கிலோ சூடோமோனஸ் கலவையை 50 கிலோ மக்கிய சாணம் எருடன் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

வாழையில் ஏற்படும் வாடல் நோய் மற்றும் அழுகல் நோயை கட்டுப்படுத்த பொதியுரை(கேப்ஸ்யூல்)முறையில் 50 மில்லி கிராம் சூடோமோனஸை கேப்சூலில் இட்டு இன்ஜெக்டர்கள் மூலம் வாழையின் கிழங்கு பகுதிகளில் துளையிட்டு அதில் கேப்ஸ்யூல் வைத்து துளையை களிமண் கொண்டு மூடி விட வேண்டும். இதுபோல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாம்பழத்தில் ஏற்படும் பழஅழுகல் நோய் மற்றும் ஆன்த்ரக்னோஸ் நோய்களுக்கு 0.5% சூடோமோனஸ் கலவையை காய் பிடித்த 15 நாட்களில் இருந்து 30 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதன் மூலம் நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.

சூடோமோனஸ் தெளிக்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது

ரசாயன பூச்சி மற்றும் பூசணிக்கொல்லி மருந்துகளுடன் கலந்து பயன்படுத்தக்கூடாது. பாதுகாப்பான ஒரு எதிர் உயிரியாக சிக்கனமான முறையில் நோய்களை கட்டுப்படுத்தி பயிரின் வளர்ச்சியை அதிகரித்து அதன் மூலமாக மகசூலையும் அதிகரிக்க செய்கிறது. இயற்கையாக மண்ணில் உள்ள ஊடகங்களில் பல மடங்காக பெருகி நீண்டகால பாதுகாப்பையும் தருகிறது. வயல் சூழலில் உள்ள இதர நன்மை செய்யும் பூச்சிகளுக்கு மண்ணில் உள்ள மண்புழுக்களுக்கு தீமை விளைவிப்பதில்லை.

எனவே விவசாயிகள் உயிரியல் முறையில் தங்கள் பயிரை பாதுகாத்திட சூடோமோனஸ் ஒரு மிகச் சிறந்த தேர்வு. அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் விவசாயிகளின் தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் வாங்கி பயன்பெற மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டார்.

Updated On: 9 Oct 2022 1:54 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  6. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  7. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  8. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  9. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...